Skip to main content

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் நிறுத்தம்;நோயாளிகள் போராட்டம்!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

தண்ணீரின்றி டயாலிசிஸ் செய்ய முடியாமல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அவதியுற்றுவருகின்றனர், இதனை கண்டித்து நோயாளிகள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvarur


திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்குள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது,  இந்த மருத்துவமனையை நம்பி திருவாரூர் நாகை காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் டயாலிசிஸ் செய்வதற்கு 22 கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். இந்த கருவிகள் மூலமக மூன்று மாவட்ட மக்கள் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாரம் தோறும் டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.

Thiruvarur


இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமணையில் தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நேற்று சிகிச்சைக்காக வந்த சுந்தரி என்பவருக்கு டயாலிஸ் செய்யமுடியாமல் காத்திருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thiruvarur


இது குறித்து நோயாளிகள் கூறுகையில்."தண்ணீர் இல்லை எனவே சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து திட்டுகின்றனர். அதனால் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டபோது அவர் மின்வாரியத்தில் உள்ள பிரச்சனை நாங்கள் என்ன செய்ய முடியும் என தெரிவித்துவிட்டார். இதனால் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

உடனடியாக இந்த பிரச்சினையை சரி செய்து உடனடியாக டயாலிசிஸ் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்," என்கின்றனர். இதனை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடிர் போராட்டத்தால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.