ADVERTISEMENT

அடுத்த சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டன் - காசி விஸ்வநாதன்

10:40 AM Sep 04, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டன் ஆக இருப்பார் என்று சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறாத நிலையில் அணியின் கேப்டன் பதவியை மீண்டும் தோனி ஏற்றார். அதற்கு பிறகு நடைபெற்ற சில ஆட்டங்களில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டும் தோனியே சென்னை அணிக்கு தலைமையேற்பார் என்று சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT