Skip to main content

6 பேரை கொன்ற யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

dharmapuri elephants moved krishnagiri andhra thirupattur return

 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கடந்த 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் நுழைந்த இரண்டு ஆண் யானைகள் அங்கு தேவசமுத்திரம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2  நாட்களாக முகாமிட்டிருந்தன. அப்போது கிருஷ்ணகிரி சம்பந்த மலைக்கு சென்று அங்கு ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீன் குத்தகைக்காரரான பெருமாள் என்பவரை மிதித்துக் கொன்றன.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கினர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மகாராஜா கடை அருகே உள்ள மூளைக்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளை அங்கிருந்து நரக பகுதி காப்புக்காடு வழிய பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்புங்குருத்தி வனப்பகுதிக்கு விரட்டினர். பின்னர் ஆந்திராவுக்கு சென்ற இரண்டு ஆண் யானைகளும் அங்கு மல்லனூர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்காக சென்ற 3 பெண்களை தாக்கியது. இதில் உஷா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்து குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வனத்துறையினருடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது சிவலிங்கம் என்பவர் உயிரிழந்தார்.

 

அதைத் தொடர்ந்து ஆந்திர வனத்துறையால் வளர்க்கப்படும் கணேஷ் மற்றும் ஜெயித்து ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு நேற்று மாலை விரட்டினர். அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம், கரடி குட்டை வழியாக யானைகள் ஆத்தூர் குப்பம், தண்ணீர் பந்தல் பகுதியில் தற்போது தேசிய நெடுஞ்சாலை கடந்து முகாமிட்டுள்ளன. இதை வனத்துறையினர் விரட்டுவதற்கு போராடி வருகின்றனர்.

 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யானைகளை விரட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் யானைகளை விரட்ட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள வேட்டை தடுப்பு பிரிவு காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாலைக்குள் வனப்பகுதிக்குள் யானைகள் விரட்டப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.