Skip to main content

ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகிய அரசுப்பள்ளி ஆசிரியை கைது! கண்டித்த கணவரை கொல்ல முயன்றது அம்பலம்!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலருடன் 'நெருக்கமாக' பழகியதை கண்டித்த கணவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காரிமங்கலம் அரசுப்பள்ளி ஆசிரியை உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொட்டலூரைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (46). விவசாயி. இவருடைய மனைவி பிரியா (41). காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


ஆசிரியை பிரியாவுக்கு உடன் பணியாற்றி வரும் சில ஆசிரியர்களுடன் 'நெருங்கி பழகி' வந்தார். மேலும், காரிமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடனும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதையறிந்த பொன்னுரங்கம், மனைவியைக் கண்டித்துள்ளார்.

dharmapuri district kariyamangalam school teacher and husband police investigation

                                                                                             (படம்: சக்திவேல், அருண்குமார்)

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இனிமேல் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று பொன்னுரங்கம் தடை விதித்துள்ளார். அல்லது, வேறு ஊருக்கு இடமாறுதல் பெற்றுச் சென்று விடு என்றும் வற்புறுத்தி உள்ளார். நாளுக்கு நாள் அவர் குடைச்சல் கொடுத்து வந்ததால், ஒருகட்டத்தில் பொன்னுரங்கத்தைத் தீர்த்துக் கட்டிவிட்டால் எல்லா பிரச்னைகளும் ஒழிந்து விடும் என்ற முடிவுக்கு வந்தார் பிரியா.


கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்பு, பொன்னுரங்கம் பெரியாம்பட்டி அருகே சென்றபோது, அவர் மீது கூலிப்படையினரை வைத்து காரை மோதச் செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவத்தில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 


முதல் முயற்சியில் தோல்வி அடைந்த பிரியா, கடந்த சில நாள்களுக்கு முன்பு, பொன்னுரங்கத்திற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை வீட்டில் வைத்தே கொலை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த திட்டமும் தோல்வியில் முடிந்ததுடன், தன்னை மனைவியே கொல்ல முயற்சிக்கிறார் என்பதை அறிந்த பொன்னுரங்கம், இதுகுறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


காவல்துறையினர் ஆசிரியை பிரியாவிடம் விசாரணை நடத்தினர். மற்ற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவதும், சகஜமாக பேசி சிரிப்பதும் கணவருக்குப் பிடிக்காததால், அவரை கொன்றுவிட தீர்மானித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கொலை முயற்சி குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக பிரியாவின் காரிமங்கலம் மலைக்கோயில் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் சக்திவேல் (23), மோகன் மகன் அருண் குமார் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 


மேலும், ஆசிரியை பிரியாவுக்கு யார் யாருடன் நெருக்கமான தொடர்பு இருந்ததோ அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆண் நண்பர்களுடனான தவறான தொடர்பால் பெண் ஆசிரியர் ஒருவரே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பள்ளிக்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.