Skip to main content

இது பேருந்து நிறுத்தம் தானா? மக்களை வியக்க வைக்கும் எம்.பி. செந்தில்குமார்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Dharmapuri Bus Stand Senthil Kumar MP

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தாளை முன்னிட்டு தர்மபுரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் அதிநவீன வசதிகளுடன் இரண்டடுக்கு குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தை நாளை (ஜூன் 3ம் தேதி) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்போகிறார் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார். 

 

தர்மபுரி மாவட்டத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்த அவர், இதற்கான திட்ட வடிவம் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து கேட்டிருந்தார். இதற்கு மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஒரு மாதிரி படத்தை பதிவிட்டார். ஒற்றை அடுக்கு கொண்ட அந்த மாதிரி படத்தை ஏற்ற எம்.பி. செந்தில் குமார், அதனை இரண்டடுக்காக செயல்படுத்த திட்டமிட்டு 2019-2020 ஆம் ஆண்டு அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால், கொரோனா காலகட்டத்தால் அந்தத் திட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் தர்மபுரி, அரூர், மேட்டூர் பாலக்கோடு என பல இடங்களுக்கு திட்டமிட்டார். இதில் தற்போது முதல் கட்டமாக தர்மபுரியில் அந்த நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

Dharmapuri Bus Stand Senthil Kumar MP

 

குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த நவீன இரண்டடுக்கு பயணிகள் நிழற்குடை பேருந்து நிறுத்தத்தில் சிறப்பம்சங்களாக தானியங்கி பணப்பரிவர்த்தன இயந்திர வசதி, சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின்சக்தி நிலையம், 24 மணிநேர கண்காணிப்பு கேமரா, 24 மணிநேர இலவச வை-பை வசதி, வர்த்தக விளம்பர எல்.ஈ.டி பலகை, குளர்சாதன பாதுகாப்பு பாலுட்டும் அறை, மினி நூலக வசதி, பண்பலை வதசி, படிப்பறை, செல்பி பாயிண்ட், கார்டன் சிட் அவுட், செல் சார்ஜிங் பாய்ன்ட் என ‘ஐ. லவ் டி.பி.ஐ’ என அமைக்கப்பட்டுள்ளது. 03.06.2023 தேதி அன்று எம்.பி. செந்தில்குமார் தலைமையில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. 

 

இது குறித்து தர்மபுரி எம்.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “தர்மபுரியில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது இந்த திட்டம் தோன்றியது. அதுவும் ஏசி வசதியுடன் பேருந்து நிலையம் என்றால் பராமரிப்பு என்பது மிகுந்த சிரம் என்பதால், மின்சாரம் இல்லாமல் இயங்க முழுமையாக சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் நிலையிலும், மற்றும் டிஜிட்டல் விளம்பரம், ஏ.டி.எம்., டீக்கடை என கொண்டுவந்து அதன் வருவாய் மூலமாக இதனை சீரமைத்துக்கொள்ள முடியும். தற்பேது தர்மபுரியில் நடைமுறைப்படுத்தி நாளை திறப்பு விழா செய்யவுள்ள நிலையில் மற்ற இடங்களிலும் அடுத்தடுத்து நடைமுறைக்கு வரும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

தொடரும் சிறார் பாலியல் கொலை சம்பவங்கள்; தர்மபுரியில் மீண்டும் அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Continued incidents of againt child ; Shock again in Dharmapuri

அண்மையில் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர் மற்றும் முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இதேபோன்ற சிறார் பாலியல் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பங்குனி உத்திரத்திற்காக பழனி மலைக்கு செல்வதற்காக அந்த சிறுவன் மாலை அணிந்து இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிறுவன் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக கூறியுள்ளனர். அன்று மாலை வரை சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட பிளஸ் 2 மாணவனை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிளஸ் டூ மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவமும் வெளியே வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பிளஸ் டூ மாணவனை அழைத்துச் சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.