Skip to main content

நிறம் மாறிய தாமிரபரணி... கலக்கத்தில் மக்கள்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
 dhamira bharani changed color ...

 

நெல்லை மாவட்டத்தின் அம்பை நகரையொட்டிய தென்மேற்கு தொடர்ச்சி மலையின் சுமார் 6500அடி உயரத்திற்கும் மேலான அகஸ்தியர் மெட்டுப் பக்கமுள்ள சதுப்பு நிலக் காடுகளில் உற்பத்தியாகிப் பெருகித் தரையிறங்குகிறது வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. அது முதன் முதலாகத் தலையணை வழியாகத் தரையிறங்கி பாபநாசம் வழியாகப் பாய்கிறது. நெல்லை,தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதராமாகவும் பயன்பாட்டிலிருந்த தாமிரபரணி பின்பு ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்ப்பதில் உயிர்நாடியாகவே இருக்கிறது.


காலம் காலமாகக் கோடை மற்றும் மழைக்காலங்களில் நிறம் மாறாத தாமிரபரணியின் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக மக்களின் பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்பட்டதில் மண்கலந்த செந்நிறமாக வந்திருக்கிறது. ஆரம்ப கட்ட வி.கே.புரம் பகுதி தொடர்ந்து வடபக்கமான தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரம் வரை சப்ளையானதில் தண்ணீர் செந்நிறமாக காணப்பட்டது மக்களிடையே கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது.

முன்னெப்போதும் இப்படி வந்ததில்லை தண்ணீருடனிருக்கும் இந்தப் பாத்திரத்தைங்களைப் பாருங்கள் சிகப்பாகவே இருக்கிறது. அதைக் குளிப்பதற்கோ,முக்கியமாகக் குடிப்பதற்கோ எப்படிப் பயன்படுத்த முடியும். பயமாக இருக்கிறது என்கிறார் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காயத்ரி. இதனிடையே சில இடங்களில் இந்த செந்நீரைக் கொண்டு குளித்த போது உடலின் தோல் பகுதியில் அரிப்பு எடுக்கிறது என்கிற புகாரும் அம்பைப் பகுதியின் அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தாகவும் குறிப்பிடுகின்றனர்.

இது போன்ற புகார்கள் கிளம்பிய உடனேயே நெல்லை மாவட்டக் கலெக்டரான ஷில்பா அதிகாரிகளை அனுப்பி உடனடி ஆய்வு நடத்தப் பணித்திருக்கிறார்.

கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் விவசாயம் பொருட்டு சேர்வலாறு, காரையாறு அணைப்பகுதிகளிலிருந்து பயன்பாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அணையின் நீர் இருப்பு கோடை வறட்சி காரணமாகக் குறைந்தது. காரையாறு அணையின் அடிப்குதியில் உள்ள மதகிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் அணையின் கீழ்ப்பகுதியில் சேர்ந்துள்ள சகதி,மண்,இலை,தழைகள் மற்றும் மட்கிப் போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது. ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. அதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக தாமிரபரணி நீர் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது. எனவே பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கிறார் நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பா.

 

 


ஆனாலும் நீரின் நிறம் எப்போது இயல்பு நிலைக்கு வருமோ என்கிற அச்ச உணர்வு மக்களை விட்டகலவில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.