Skip to main content

தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து! தேசிய அளவில் புதிய கட்சி துவங்க திட்டம்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தலித் கிறிஸ்தவர்கள் தேசிய பேரவை கண்டனம் தெரிவித்தனர். தலித் கிறிஸ்தவர்களை பாதுகாக்க புதிய கட்சி துவங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தலித் கிறிஸ்தவர்கள் தேசிய பேரவை பொதுச்செயலாளர் இ.டி சார்லஸ் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும் போது…

நீதிபதி ரெங்கநான் மிஸ்ரா கமிஷன்  பரிந்துரையில் பௌத்தம் மற்றும் சீக்கியம் மதத்தை தழுவிய தலித் மக்களுக்கு மத்திய அரசு எஸ்.சி அந்தஸ்து வழங்கியது போல் கிறிஸ்தவ தலித் மக்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும். என்கிற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி காலம் தாழ்த்தி வருகிறது.

 

  thiruchy


இதனால் அரசிலில், வேலைவாய்ப்புகள், வங்கிகடன், கல்விகடன் ஆகியவற்றில் புறந்தள்ளபடுகிறோம். இந்த அநீதியை எதிர்த்து 15 வருடங்களாக போராடி வருகிறோம்.

இப்படி பாதிக்கப்படும் தலித் கிறிஸ்தவர்களின் பாதிப்புகளில் இருந்து மீட்டெடுக்க தலித் கிறிஸ்தவ தேசியதலைவர் ஜார்ஜ், பொதுசெயலாளர் சார்லஸ் மற்றும் விஜய்முத்துகுரி, தனம், உள்ளிட்ட தலைவர் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கு கடந்த 8.01.2020 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்து மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். இதில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போதைய மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டினால் தமிழகத்திலேயே சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள், மதச் சடங்குகள், ஆலய ஆராதனைகளில் கலந்து கொள்வதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

வட இந்தியாவில் உள்ள பீகார், ஒடிசா, குஜராத், மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கும், மிஷனரிகளும் இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள் போல தமிழகத்திலும் தற்போது ஆங்காங்கே தலை காட்டத் துவங்கியுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளும், அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

சமீபத்தில் மதுரையில் மதபோதகர் அவரது மனைவி அச்சுறுத்தப்பட்ட போதும் ஜெபவீடு நாசப்படுத்த போதும் அதிமுக அரசு எந்தவித பாதுகாப்பு அளிக்கவில்லை. எங்களது பாதுகாப்பு கிறிஸ்தவ ஆலயங்கள், மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் இவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிறுபான்மையினர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவையின் தலைவர்கள், மற்றும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளோடும், பேராயர்களோடும் பேசி வருகிறோம். புதிய அரசியல் கட்சி துவங்குவதற்காக பேசி வருகிறோம் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.