Skip to main content

தாக்கப்பட்டாரா? தவறுதலாக சிக்கினாரா? –வாகனசோதனையில் உயிர்போன பரிதாபம்

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
acc

 

தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி அலுவலக உத்தரவுப்படி தினமும் ஒவ்வொரு காவல்நிலையமும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்கிற உத்தரவுப்படி வேலை செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் கிராமிய காவல்நிலையம், கணியம்பாடி என்கிற கிராமத்தில் உள்ளது. இந்த காவல்நிலையம் வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தின் சார்பில் வழக்கம் போல் பிப்ரவரி 8ந்தேதி மாலை 5 மணி முதல் வேலூர் – திருவண்ணாமலை சாலையில் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர்.


அப்போது கண்ணமங்களத்தில் இருந்து வேலூரை நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்துள்ளது. அந்த வாகனத்தை ஒரு போலீஸ்காரர் லத்தியை காட்டி மடக்கியுள்ளார். அந்த பைக்கை ஓட்டி வந்த இளைஞர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றுள்ளனர். தங்கள் முன்பு ஒரு லாரி செல்ல அதை க்ராஸ் செய்து போலீஸிடம் சிக்காமல் தப்பிக்கலாம் என நினைத்து ஓட்டியதாக கூறப்படுகிறது.


அங்கு சாலையின் குறுக்கே வேகத்தை குறைக்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் பைக் மோதி, பின்னர் லாரி மீது மோதியதில் வண்டியை ஓட்டி வந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த விக்ரம் தூக்கி வீசப்பட்டு அதிஷ்டவசமாக லேசான காயத்தோடு உயிர்தப்பினான். பின்னால் உட்கார்ந்திருந்த விக்னேஷ் என்கிற 20 வயது இளைஞன் லாரியில் மோதி கீழே விழுந்து இறந்தான்.

 

acc


போலீஸ் லத்தியால் தாக்கியதால் தான் அவன் கீழே விழுந்து இறந்தான் என கணியம்பாடியின் ஒருப்பகுதி மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசைக்கட்டி நின்றன. தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் இரவு வரை நீண்ட இந்த பிரச்சனையில் வேலூர் ஏஐடியூசியினரும் வந்து கலந்துக்கொண்டனர். இறுதியில் தவறு செய்தது யார் என விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி தந்தபின்பே 2 மணி நேர மறியலை கைவிட்டனர்.


இன்று பிப்ரவரி 9ந்தேதி காலை 11 மணியளவில் உடற்கூறாய்வு முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கிவிடக்கூடாது என வேலூர் சலவன்பேட்டையில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, தற்போது, வண்டியை நிறுத்தாமல் போன இளைஞர்களை காவலர்கள் தாக்கினார்களா?, அல்லது அவர்கள் தவறுதலாக மோதி விபத்தில் சிக்கி இறந்தார்களா என காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.