DGP Sylendrababu issued orders to police officers

Advertisment

திருச்சி போலீஸ் கிளப்பில் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அதுகுறித்த அறிவுரைகளை வழங்கினார்.

அலுவல் பணிகள் நிமித்தமாக மதுரை வந்த டிஜிபி, சாலை மார்க்கமாக சென்னை செல்லும் வழியில் திருச்சி போலீஸ் கிளப்பில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், மாநகரக் காவல்துறை ஆணையர் அருண், DIG மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க கண்காணிப்பைதீவிரப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.