Skip to main content

மூட்டுவலியால் அவதிப்பட்ட கோவில் யானை... காலணி செய்து வழங்கிய பக்தர்கள்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

 Devotees made special shoes for temple elephant suffering from arthritis!

 

மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த கோவில் யானைக்கு சிறப்பு காலணி செய்து பக்தர்கள் வழங்கி உள்ளனர்.

 

திருநெல்வேலி மாநகர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள யானை காந்திமதி தனது 13 வயதில் கோவிலுக்கு வந்த நிலையில் தற்பொழுது 53 வயதாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் கோவில் யானை காந்திமதியை பரிசோதனை செய்த பொழுது யானையின் உடல் எடை அதன் அளவிற்கு மீறி இருப்பதால் 300 கிலோ  எடையைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.  அதன்படி கடந்த ஆறு மாதங்களாக கோவில் யானை வாக்கிங் அழைத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில் யானையின் எடையில் 150 கிலோ குறைந்தது. ஆனால் வயது முதிர்வின் காரணமாக யானைக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்கள் மூட்டு வலி போவதற்காக 12,000 ரூபாய் மதிப்பில் இரண்டு ஜோடி சிறப்பு காலணி செய்து கோயில் யானை காந்திமதிக்கு வழங்கி உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.