Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி... நிரந்தர அர்ச்சகர் நியமனத்தால் பக்தர்கள் சந்தோஷம்!!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Devotees happy with the appointment of a permanent priest

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை. கல்வராயன் மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் வெள்ளாறு பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கல்வராயன் மலையிலிருந்து புறப்பட்டு வரும் இந்த நதி இதன் கரைகளில் 12 ராசிகளுக்கு உரிய 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. அதில் கடலூர் -பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் காரியானூர் அக்னீஸ்வரர், திருவாலந்துறை தோளிஈஸ்வரர், திருமாந்துறை ஜோதீஸ்வரர், சு. ஆடுதுறை குற்றம் பொருத்த ஈஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத ஈஸ்வரர், திருவட்டத்துறை அரத்துறைநாதர், கோட்டைக்காடு அகஸ்தீஸ்வரர், இப்படிப்பட்ட சிறப்புக்கள் பெற்ற கோவில்கள் உள்ளன. இதில் திருவட்டத்துறையில் அரத்துறை நாதர், அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோர் அருளாட்சி செய்து வருகின்றனர்.

 

இக்கோயில் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகிய மூவரால் பாடல் பெற்ற தேவார திருத்தலம். இக்கோயிலில் அர்ச்சகராக நீண்ட காலம் பணிசெய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார் சாமிநாத குருக்கள். அதன்பிறகு நிரந்தரமான அர்ச்சகர் நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிரந்தர அர்ச்சகர் கிடைக்காமல் அவ்வப்போது தற்காலிகமாக சில அர்ச்சகர்களை தேடி கொண்டுவந்து வழிபாடு செய்தனர். இப்படிப்பட்ட தேவார பாடல் பெற்ற இந்த திருத்தலத்தில் நிரந்தரமாக ஒரு அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி அறநிலையத்துறை அதிகாரிகள் சிவா என்கிற சிவக்குமார் என்பவரை நிரந்தர அர்ச்சகராக நியமனம் செய்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த ஆலயத்தின் கோவில் கொண்டுள்ள இறைவனின் திருவிளையாடல் சம்பவம் ஒன்று அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

திருஞானசம்பந்தர் காலத்தில் அவர் சிறு குழந்தையாக இருந்தபோது சீர்காழி சிவன் கோவிலில் பாலுக்கு அழுத போது அம்பாள் அவருக்கு ஞானப்பால் கொடுத்து அவரை அதிசய குழந்தையாக மாற்றினார். அந்த குழந்தை அம்பாளையும் இறைவனையும் ஊர் ஊராகச் சென்று தனது ஞானத்தால் தேவாரப் பாடல்களாக மெய்யுருக பாடி வந்தார். அப்படி பாடுவதற்கு இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களுக்கு செல்லும் அந்த காலகட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் அவரது தந்தை திருஞானசம்பந்தர் நடத்தி அழைத்துச் செல்வார். அவருக்கு கால் வலிக்கும் போது அவரை தனது தோளில் சுமந்து சென்று பாட வைப்பார். இது கண்ட இறைவன் சம்பந்தன் மீது பரிவு காட்ட விரும்பினார். அப்படி ஒரு முறை திருவட்டத்துறை அரத்துறை நாதர் அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோரை தரிசிக்கவும் அவர்களை பற்றி பாடுவதற்காக தனது தந்தை தோளில் அமர்ந்தபடி திருவட்டத்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

அப்படி வரும்போது இறையூர் என்ற இடத்தின் அருகே வரும்பொழுது இரவு நேரம் நெருங்கி விட்டது. அதனால் அன்று இரவு திருஞானசம்பந்தரும் அவரது தந்தை மற்றும் அவருடன் வந்த சிவனடியார்கள் அனைவரும் இறையூரிலேயே தங்கி விட்டனர். மறுநாள் காலை திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்தனர். அன்று இரவு திருவட்டத்துறை அரத்துறை நாதர் கோவில் தர்மகர்த்தாக்களின் கனவில் ஒரு காட்சி தோன்றியது. அதில் சிவபெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்து அன்பர்களே திருஞானசம்பந்தன் சீர்காழியிலிருந்து சிறு குழந்தையாக நடக்கமுடியாமல் தனது தந்தையின் தோள் மீது அமர்ந்தபடி எம்மைப்பற்றி பாட இங்கு வந்து கொண்டிருக்கிறான். இன்று இரவு அவன் இறையூரில் தங்கியுள்ளான். நீங்கள் காலையில் எழுந்ததும் எமது ஆலயத்திற்க்கு செல்லுங்கள் அங்கே முத்துச்சிவிகை முத்துக்குடை முத்து மோதிரம் ஆகியவை உள்ளன.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

அவைகளை எடுத்துச் சென்று அந்த சிவிகையில் திருஞான சம்பந்தனை அமரவைத்து முத்துக் குடை பிடித்து முத்து மோதிரம் அணிவித்து இங்கு அழைத்து வந்து எம்மைப்பற்றி பாட செய்யுங்கள் என்று கூறி மறைந்துவிட்டார். காலையில் எழுந்ததும் தன் கனவில் மட்டுமே இறைவன் தோன்றி கூறியதாக எண்ணிக்கொண்டு மற்ற தர்மகர்த்தாக்களிடம் ஒரு தர்மகர்த்தா சென்று தாம் கண்ட கனவை பற்றி கூறியுள்ளார். அப்போது அவரும் இதே போன்ற கனவு கண்டதாக கூறினார். இதே போன்று அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியதை அறிந்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி அவர்கள் மெய்சிலிர்த்தனர். தர்மகர்த்தாக்கள் ஒன்று சேர்ந்து  சென்று கோயிலை திறந்து பார்த்தன என்னே அதிசயம் இறைவன் கனவில் கூறியது போன்றே கோயில் உள்ளே முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்திரைச் சின்னம் ஆகியவை இருந்தன.

 

தர்மகர்த்தாக்கள் அனைவரும்  கிராம மக்களுடன் அவைகளை எடுத்துக்கொண்டு திருஞானசம்பந்தரை சந்தித்து அழைத்து வருவதற்காக புறப்பட்டனர். அன்று அதிகாலை இறையூரில் தங்கியிருந்த திருஞானசம்பந்தரும் அவரது தந்தை மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு திருவட்டத்துறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இப்படி எதிர் எதிரே இரு தரப்பினரும் சந்தித்து கூடினர். அந்த இடம் தற்போது கூடலூர் என்ற பெயரில் ஒரு ஊரே அமைந்ள்ளது. அதே இடத்தில் திருஞானசம்பந்தரை முத்துச் சிவிகையில் அமரவைத்து திருவட்டத்துறை அழைத்து வந்தனர். இங்கு வந்து அவர் இறைவனையும், அம்பாளையும் போற்றி பாடி வழிபட்டு சென்றார். இதை நினைவு கூறும் வகையில் தற்போதும் ஒவ்வொரு மாசி மாத மக உற்சவத்தின்போது  திருவட்டத்துறை கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்று இறையூரில் உள்ள தாகம் தீர்த்தபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து உற்சவரான திருஞான சம்பந்தரை அதில் அமர வைத்து திருவட்டத்துறை ஆலயத்திற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு திருஞானசம்பந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

மாசிமகத் திருவிழா முடியும் வரை இங்கே இருந்துவிட்டு விழா முடிந்த பிறகு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறார் திருஞானசம்பந்தர். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மாசிமக உற்சவத்தின்போது நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவன் அரத்துறை நாதர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் ஆலயத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தெய்வங்களையும் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளையும் முறையாக செய்வதற்கும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இன்முகம் காட்டி இறை உணர்வோடு உரிய வேத மந்திரங்களை முழங்கி அர்ச்சனை ஆராதனை உட்பட அனைத்து வழிபாட்டுமுறைகளையும் வேத ஆகம முறைப்படி செய்து வருகிறார் கோயில் அர்ச்சகர் சிவா என்கிற சிவக்குமார்.

 

எனவே பக்தர்கள் எந்த நேரத்தில் அவரைதொடர்பு கொண்டாலும் உரிய ஆலோசனைகளையும் வழிபாட்டு முறைகளையும் பூஜைகள் எப்படி செய்ய வேண்டும், அதற்கு என்னென்ன தேவை என்பதை எடுத்துக்கூறி அதன்படி வழிபாடுகளை செய்து வருகிறார். சிவகுமார் அவர்களைதொடர்பு கொள்ள வேண்டிய எண்; 9629321252 -திருவட்டத்துறை வாருங்கள் அரத்துறை நாதர் அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோரை தரிசனம் செய்து அருள் பெற்று செல்லுங்கள் என்கிறார்கள் திருவட்டத்துறை கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.