Skip to main content

சிவகங்கை மண்ணிற்கு சாகித்ய அகாதமி!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019


  

   சாகித்ய அகாதமி விருது வரிசையில், குழந்தைகள் இலக்கியத்தில் பங்களித்தமைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவருக்கு இந்தாண்டிற்கான சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைத்துள்ளதால் மாவட்டத்திலுள்ள இலக்கிய வட்டாரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

d

 
      வருடந்தோறும் இலக்கியத்தில் சிறந்தப் படைப்புக்களை தந்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசால் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுவது வழக்கம். இதில் இந்தாண்டிற்கான விருது வரிசையில் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புக்களை தந்த தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 

 

d

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் தேவி நாச்சியப்பன் கீழச்சீவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரிசையையாக பணியாற்றியதோடு மட்டுமில்லாமல் பந்துவும் பாப்பாவும், புத்தகத் திருவிழா மற்றும் பசுமைப்படை உள்ளிட்ட நூல்களை இயற்றி சிறார் இலக்கியத்தியத்தை மேம்பட வைத்தவர். 

 

d

 

மறைந்த குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகளான இவர், " நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்" எனும் புத்தகத்தையும் திறம்பட தொகுத்து இலக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அது போக, காரைக்குடி கவிமணி குழந்தைகள் சங்கத்தின் அமைப்பாளராக இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தியத் திறனை ஊக்குவிக்க, தற்பொழுது இவருக்கு இந்தாண்டிற்கான சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விருதால் சிவகங்கை மாவட்ட இலக்கிய வட்டாரமே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.!


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி; கைதட்டி ரசித்த டி.ஆர்.பி.ராஜா

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
DR. Minister Udayanidhi made a request to Balu; D. R. P. Raja enjoyed the hand clapping

சென்னை, அண்ணா அறிவாலயத்தின், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய உரிமைக்குரல், தி மேன் அண்ட் மேசேஜ் (The Man and Message), மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ் (My voice for the voiceless), பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.1.2024)வெளியிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்திய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள்  மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தி இந்து நாளிதழ் குழுமத் தலைவர் என். ராம், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மூலம்  59 கோடி ரூபாய் மாநாட்டிற்கு நிதி கொடுத்தார்கள். அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ரூ. 25 லட்சம் கொடுத்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பரவாயில்லை, இளைஞர் அணி மாநாட்டுக்குத்தான் நிதி கொடுக்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதே வேண்டுகோளை திமுக தலைவரிடம் இளைஞர் அணி மாநாட்டில் வைத்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அனுபவம் முக்கியம் தான். இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்காவது வாய்ப்பு கொடுங்கள்” என டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கைதட்டி புன்னகையுடன் ரசித்தது குறிப்பிடத்தக்கது.