Skip to main content

வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கும் தேவன்குறிச்சி மலை!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

சர்வதேச தொல்லியல் தினத்தை முன்னிட்டு அறிவோம் வரலாறு, காப்போம் தொன்மையை என்ற நோக்கில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டியில் வரலாற்று மரபு நடை தொடங்கப்பட்டது.பரணிதரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது,

 

Devancurichi Mountain - A Historical Treasure

 

தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி மலை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு 1976 இல் மத்திய தொல்லியல்துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்படுள்ளன. அந்த எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன.

இம்மலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த தடயங்களும் இருக்கின்றன. சமணத் துறவிகள் கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்கு ஆதாரமாக சமணப்புடவும், சமணப் படுக்கைகளும், மகாவீரரின் நின்ற மற்றும் அமர்ந்த நிலையிலான சிற்பங்களும் இங்கு உள்ளன. சமய மறுமலர்ச்சி காலத்திற்குப் பின் இவை சைவ மதத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Devancurichi Mountain - A Historical Treasure


கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இங்கு சிவாலயம் கட்டப்பட்டது என்பதற்கு கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இக்கோயிலின் முந்தைய பெயர் திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழைய பெயர் செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை பாண்டியர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளன.

 

Devancurichi Mountain - A Historical Treasure


கோயிலைச் சுற்றி 8 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் பூஜைக்கும், விளக்கு ஏற்றுவதற்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவு வாயிலில் கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகிறது. மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புலிகளிடமிருந்து மக்களைக் காத்து உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் கல்லாக இது உள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டையும் உள்ளது. இம்மலையின் உச்சியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது இவ்வூருக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது என்றார்.

 

Devancurichi Mountain - A Historical Treasure

 

நிகழ்ச்சியில் ரெங்கசாமி நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரியச் சிறப்புள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.