Skip to main content

'தமிழக மதச்சாா்பற்ற ஜனதாதள' தலைவா் மறைவுக்கு தேவகவுடா, குமாரசாமி இரங்கல்!

Published on 18/11/2020 | Edited on 19/11/2020
Devagauda, ​​Kumaraswamy condoles on Passed away of Tamil Nadu secular Janata Dal leader

 

தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவராக இருந்த, குமாி மாவட்டம் தக்கலையைச் சோ்ந்த வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில் (93). 17 -ஆம் தேதி இரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் கட்சியின் தமிழக தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று (18-11-2020) மாலை, அவாின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

இதையொட்டி, அவாின் மறைவுக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் கா்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான குமாரசாமி ஆகியோர் இரங்கல் தொிவித்துள்ளனா். மேலும், நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாாி, கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகி தாசன் நாடார் மற்றும் அந்தக் கட்சியின் மாநில நிா்வாகிகள் எனப் பலரும் நோில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அரசியலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து மறைந்தது வரை அரசியலில் நோ்மையாகவும் எளிமையாகவும் இருந்துவந்த முகம்மது இஸ்மாயில் குறித்து அவாின் நினைவுகளைப் பலர் பகிர்ந்தனா். அதில், குமாி மாவட்ட முஸ்லீம் சமுகத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பட்டதாாியும் முதல் வழக்கறிஞரும் இவா்தான். 1956- ல் குளச்சல் நகா்மன்றத் தலைவராக இருந்தாா். 1980-ல் பத்மனாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஆனாா்.

இந்தியாவில் பிரதமராக இருந்த மொராா்ஜி தேசாய், வி.பி.சிங், சந்திரசேகா், தேவகவுடா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். தேவகவுடா பிரதமராக இருக்கும் போது முகம்மது இஸ்மாயிலை கா்நாடக கவா்னராக அறிவித்தாா். அடுத்த நிமிடமே, முகம்மது இஸ்மாயில், அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளாமல், தேவகவுடாவிடமே நன்றியோடு திருப்பி ஒப்படைக்கிறேன் என்றார். காமராஜரோடு காங்கிரசில் இருந்து வெளியே வந்த போது, மீண்டும் கடைசி வரை காங்கிரசில் சேராமல் மாற்றுக் கட்சிகளோடுதான் அரசியலை தொடா்ந்தாா்.

கன்னியாகுமரியில் காமராஜர் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், பார்வையாளா்கள் வாிசையில் கடைசியில் உட்கார்ந்து இருந்த முகம்மது இஸ்மாயிலை, மேடையில் முதல்வராக இருந்த கலைஞர் பாா்த்துவிட, உடனே கலைஞர் எழுந்து, முகம்மது இஸ்மாயிலை மேடைக்கு அழைத்துத் தன்னுடைய அருகில் உட்காரவைத்தது அத்தனை பேரையும் நெகிழச் செய்தது. இவ்வாறு பலரும் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.