Advertisment

திருச்சி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளின் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்வாக உள்ளவர்களின் விவரம்!

Details of those elected as heads of municipalities in Trichy district!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 பேரூராட்சிகள் உள்ளது. இதில் திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 10- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், தாத்தையங்கார் பேட்டை பேரூராட்சியில் 11- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜலெட்சும் கணேசன், உப்பிலியபுரம் பேரூராட்சியில் வார்டு 1- ல் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகலாதேவி ராஜசேகரன், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கீதா சுரேஷ், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் உள்ள 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேகலா, மேட்டுபாளையம் பேரூராட்சியில் உள்ள 11- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சௌந்தர்ராஜன், மண்ணச்சநல்லூரில் உள்ள 14- வது வார்டில் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசண்முககுமார், தொட்டியும் பேரூராட்சியில் 5- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண்யா பிரபு, உள்ளிட்டவா் பேரூராட்சி மன்றத் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertisment

அதேபோல், திருச்சி மத்திய மாவட்டம், சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 1- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமுதவள்ளி தங்வேலு, பூவாளுா் பேரூராட்சியில் உள்ள 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரி பால்ராஜ், புள்ளம்பாடி பேரூராட்சியில் 3- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோகிலா முத்துக்குமார், கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள 15- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராஜ், பொன்னபட்டி பேரூராட்சியில் உள்ள 15- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண்யா நாகராஜ் ஆகியோர் பேரூராட்சி மன்ற தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertisment

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5 நகராட்சிகள் உள்ளது. இதில், திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள துறையூர் நகராட்சியில் 18- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராணி மலர்மன்னன், முசிறி நகராட்சியில் உள்ள 19- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலைச்செல்வி சிவக்குமார், திருச்சி மத்திய மாவட்டம், லால்குடி நகராட்சியில் உள்ள 21- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை மாணிக்கம், திருச்சி தெற்கு மாவட்டம், துவாக்குடி நகராட்சியில் உள்ள 12- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காயாம்பு, மணப்பாறை நகராட்சியில் உள்ள 25- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைக்கேல்ராஜ் ஆகியோர் நகர்மன்ற தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நாளை (04/03/2022) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

chairman trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe