Skip to main content

கடனுக்காக நிலத்தை எழுதிக்கேட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
sui


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(34). இவரது மகளுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கான வரவு-செலவுகளை இதில் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் தனக்கு தரவேண்டுமென மகேஷ்வரன் கூறியுள்ளார். இதில் ஒரு லட்சத்தை சில மாதங்களில் முத்துச்சாமி திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் தரவேண்டுமெனக் கூறியுள்ளார்.

 

இந்தத் தொகையை கொடுக்க முடியாமல் முத்துச்சாமி திணறி வந்த நிலையில் அரவது நிலத்தை எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். இந்நிலையில், நடைபெற்ற ஊர்ப் பஞ்சாத்தில் மேற்படி தொகைக்கு நூற்றுக்கு 3 ரூபாய் வீதம் வட்டியோடு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதற்கு முத்துச்சாமியும் சம்மதித்துள்ளார். ஆனால், நூற்றுக்கு 12 ரூபாய் வீதம் வட்டி போட்டுத் தரவேண்டும். இல்லையென்றால் நிலத்தை எழுதித்தர வேண்டுமென மகேஷ்வரன் மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குச் சென்று பெண்களை கேவலமாகப் பேசுவது, சமையல் செய்யவிடாமல் தடுத்து பாத்திரங்களை வெளியில் எறிந்து வீசுவது போன்ற அராஜகச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

 

இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் முத்துச்சாமி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனமுடைந்த முத்துச்சாமி வியாழக்கிழமையன்று பூச்சிமருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துச்சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்பொழுது தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்: கொடூரமான கந்துவட்டி முறையால் விவசாயி முத்துச்சாமியை தற்கொலைக்குத் தூண்டிய தங்க.மகேஷ்வரன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள முத்துச்சாமிக்கான சிகிச்சைச் செலவு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையும் மகேஷ்வரனிடம் வசூல் செய்து ஒப்படைக்க வேண்டும். காவல் துறை உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
                

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் மனைவி; துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட வாலிபர்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

A teenager passed away for extramarital affair in uttar pradesh

 

உத்தர பிரதேசம் மாநிலம், பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு (30). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாவண்யா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சோனு கடந்த 9 மாதங்களாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. 

 

இதனையடுத்து, கணவரின் உறவை தெரிந்து கொண்ட லாவண்யா சோனுவை பலமுறை கண்டித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சோனுவின் குடும்பத்தினர் முதற்கொண்டு சோனுவை கண்டித்துள்ளனர். ஆனால், சோனுவின் மறைமுக உறவு நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளது. இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் சோனு, தனது காதலியுடன் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சோனுவை அவரது மனைவி லாவண்யா செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டிருக்கிறார். வீடியோ காலை எடுத்த பின்பு சோனுவின் காரில் அந்த இளம்பெண் இருப்பதை பார்த்த லாவண்யா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனு, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார். 

 

இதில் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த அந்த இளம்பெண், அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சிலர், சோனுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சோனுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சோனு வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

இளம் பெண்ணை சிக்க வைக்க குடும்பத்தையே கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

An ex-soldier and his family passed away to trap a young woman

 

மதுரை மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(41). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு விஷாலினி (36) என்ற பெண்ணுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் வாடகை வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில், ரமேஷ் குடியிருந்த வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. இதனையடுத்து, நேற்று முன் தினம், ரமேஷ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். மேலும், அங்கு வந்த காவல்துறையினர், ரமேஷ் வீட்டை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது, அங்கு ரமேஷ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தனர். 

 

இதனையடுத்து, காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரமேஷ் வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்திய போது அங்கு தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர். இதனையடுத்து அந்த கடிதத்தை வைத்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், ரமேஷ் ராணுவத்தில் இருந்து வந்ததும், தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதனால், ஆன்லைன் மூலம் தகவல்களை தேடிய போது நரிமேட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

 

அதன் பின்னர், இவர்கள் இருவரும் ஒன்றாக தொழில் நடத்தி வந்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. நாளடைவில், அந்த பெண் ரமேஷை விட்டு ஒதுங்கி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த பெண்ணின் பிரிவு ரமேஷின் மனநிலையை பாதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணிடம், மீண்டும் உறவை நீட்டிக்க கூறி ரமேஷ் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்று ரமேஷ் எண்ணியுள்ளார். இதனால், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களும் தானும் உயிரிழந்தால், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணி சம்பவத்தன்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து, நிலவேம்பு கசாயத்தில் விஷ மருந்து கலந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், ரமேஷ் பழகிய அந்த பெண்ணை சிக்க வைக்க வைப்பதற்காக அவரைப்பற்றி அவதூறாக கடிதத்தில் ரமேஷ் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பாக, அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.