Advertisment

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவு- தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்

Desmond Tutu passed away tamilnadu chief minister mkstalin condolence

Advertisment

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27/12/2021) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிவரும்; உள்நாட்டு போரின் போது அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக 2013-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி வரும்; மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் (Desmond Tutu) மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறவெறி, இனவெறிக்கு எதிராக அவர் நடத்திய அறப்போர், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகிற்குவழிகாட்டட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

condolence Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe