Skip to main content

உதயநிதிக்கு பதவி... எனக்கு மிகுந்த மகிழ்ச்சி...! - திமுக செயலாளர் சாமிநாதன்

Published on 31/05/2019 | Edited on 31/05/2019


திமுகவில் அதிரடி திருப்பமாக அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமு கழகம் அபார வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து கட்சியில் புதுப்பொலிவு ஏற்படுத்த  முக.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். 

 

 

 Designation to Udhayanidhi... I'm so happy ...! - DMK Secretary senthilnathan

 

அதன் தொடக்கமாக திமுகழகத்தில் சமீப காலமாக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதுதான். இதை தற்போது தக்க தருணமாக முடிவு செய்த திமுகழகம் அக்கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு மறைந்த முதல்வர் கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினை திமு கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 

 

 

இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் ஆலோசனை செய்து ஏற்கனவே தற்போது இளைஞர் அணிச் செயலாளராக உள்ள வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் பேசினார்கள். அதற்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் மிகுந்த மகிழ்ச்சியோடு இதைத்தான் நான் முன்பே எதிர்பார்த்தேன். தலைவர் கலைஞர் குடும்பத்தில் இருந்து தான் இந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கட்சித் தலைவரான தளபதி என்னை இளைஞரணி செயலாளராக நியமித்தார். அந்தப் பொறுப்பில் நான் முழுமையாக பணியாற்றினேன். இருப்பினும் கட்சியின் மேலிடம் தொடங்கி தொண்டர்கள் வரை தலைவர் கலைஞரின் குடும்பத்தில் இருந்து தான் இந்த பொறுப்பிற்கு ஒருவர் வரவேண்டும் என்று விருப்பம் இருந்தது. எனக்கும் அதே விருப்பம் தான். இப்போது எடுத்த முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் மனப்பூர்வமாக இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

 


கட்சித் தலைமை வெள்ளகோயில் சாமிநாதனுக்கு தாய் கழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தெரிகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.