வெறிச்சோடிய சென்னை மேம்பாலங்கள்... (படங்கள்)

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் அந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர இருப்பதால் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் பல பாலங்கள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Bridge Chennai lockdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe