Skip to main content

வெறிச்சோடிய இருக்கைகளை படமெடுத்த நிருபர்; அவசரமாக முடிந்த பாஜக பொதுக்கூட்டம்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

A deserted BJP rally-a meeting that ended in haste

 

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியல் சாசன சமர்ப்பண நாள் மற்றும் பஸ்தி சம்பார்க் அபியான் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பட்டியல் அணித் தலைவர் தடா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றுப் பேசினார். மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அகத்தியர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி, மாநில செயலாளர் வினோத் செல்வம், கட்சியின் மாவட்ட தலைவர் மருதையன், மற்றும் சிவ பித்தன் ஈஸ்வர் ராஜலிங்கம், நந்தனார் கல்விக் கழக நிர்வாகி ஜெயச்சந்திரன் மற்றும் ஆன்மீக குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 

இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணாமலை வருகிறார் எனக் கூட்டத்தின் கடைசி நாள் வரை அறிவித்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்திற்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் பட்டியல் அணி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதாகவும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறியிருந்தனர். ஆனால் 800 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட்டத்தின் பாதி நேரத்தில் அண்ணாமலை வரவில்லை எனத் தெரிந்ததும் கலையத் தொடங்கினர். வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதில் பாதி இருக்கைக்கு மேல் காலியாக இருந்தது. மேலும் சிறப்புப் பேச்சாளர்கள் பேசும்போது வெறும் 100 பேர் மட்டுமே இருந்தனர். இரவு 8 மணிக்கு 75 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தது. இதனை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது அங்கிருந்த கட்சியினர் செல்போனை பிடுங்கி படங்களை அழித்தனர். பின்னர் அவர்கள்  நாகரிகமற்ற முறையில் பேசினர்.  

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கையில் அமராமல் சுற்றித் திரிந்தனர். இது மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கூட்டம் கலைவதைப் பார்த்த தலைவர்கள் இரவு 8.30 மணிக்கு எல்லாம் கூட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.