Skip to main content

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதக்கம்! ப.ரவீந்திரநாத்குமாருக்கு பாக்கெட் கடிகாரம்!- கவுரவித்த மூத்த குடிமகன்கள்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று நெபர்வல்லியிலுள்ள மூத்த குடிமகன்களுக்கான‘மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ்’மையத்தின் சார்பில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’(MAFS Gandhi Sesquicentennial Medallion of Excellence) பதக்கம் வழங்கி அவரை கவுரவித்தனர். 
 

deputy cm o paneerselvam america award theni mp raveendranath kumar

 

பதக்கத்தினை வழங்கிய 86 வயதான பிரதாப்சிங், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கும் மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். சிகாகோ நகரிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.