Skip to main content

தனிப்படையினரை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல்துறை துணைத்தலைவர்!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் தலைமையில் 7 காவலர்களை கொண்டு அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த இரண்டு மாதங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 14 குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.7,35,000/- மதிப்புள்ள 147 ஆடுகளை மீட்டுள்ளனர். ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 8 வாகனங்களை பறிமுதல் செய்யதுள்ளனர்.தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக திருச்சி சரகத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரம்பலூர் உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான பெரம்பலூர் காவல் நிலைய குற்ற எண் 1555/21 மற்றும் 8 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 1/2 சவரன் தங்க நகைகள், 464 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 60,000 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தின் மங்களமேடு உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 202/21 மற்றும் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 வெள்ளி கடவுள் சிலைகள் உட்பட ரூ 1,50,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சரக தனிப்படையினருக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுரை வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.