Skip to main content

ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துட்டு ரோட்டுல சிந்தூரா பாடிக்கிட்டு போக முடியுமா! - ஓபிஎஸ் தம்பி ராஜாவின் ஆடியோ

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, நுகர்வோர் அமைப்பு மாவட்ட தலைவருடன் பேசிய ஆடியோ தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோ வாட்சப் மற்றும் பேஸ்புக்கில் காட்டுத் தீ போல் பரவி வருவது பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது. துணை முதல்வரான ஓபன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளத்தில் முன்னாள் சேர்மேனாகவும் இருந்தவர்.

 

raja

 

தற்போது மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தனது அரசியல் செல்வாக்கை பன்னீர்செல்வம் பயன்படுத்தி தனது தம்பிக்கு பதவி வாங்கி கொடுத்துவிட்டார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருந்து வருகிறது. இந்தநிலையில் தான் ஓ.ராஜாவும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் பெரியகுளம் நகர பொதுச் செயலாளரும், நுகர்வோர் அமைப்பின் மாவட்ட தலைவருமான துரை என்பவரிடம் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

raja


பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கும் பொருள்களோடு வெளிப் பொருட்களையும் பொதுமக்களை வாங்கச் சொல்வதின் மூலம் அதிக விலைக்கு ரேசன் கடைகளில் பொருட்களை விற்கப்படுவதாகவும் அதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தான் காரணம் என ரேசன் கடை ஊழியர்கள் பலர் துரையிடம் புகார் கூறி இருக்கிறார்கள். இந்த விஷயம் பன்னீர்செல்வம், ராஜா காதிற்கு எட்டியிருக்கிறது. அதை தொடர்ந்துதான் துரையிடம் போனில் பேசிய ராஜாவோ, “ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறார் என கேட்கிறார். நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன் ஒரு கார்டுக்கு 40 ரூபாய் வீதம் ஒன்றேகால் லட்சம் கமிசன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன் என்கிறார் துரை. நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய் உன் பிழைப்பை மட்டும் பார் எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவளிக்க வேண்டும். நீயா செலவு செய்வாய் கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா? நீ தேவை இல்லாத வேலை பார்க்கிறாய தேவையில்லாமல் கடையில் போய் கரைச்சல் பண்ணாத வெட்டியாய் கெட்டுப் போயிருவ ஒன்னும் செய்ய முடியாது. ஏற்கனவே ரவி அண்ணன்ட்ட சொன்னேன். அவர் கடைக்காரர்ட்ட சொல்லிட்டேன்னாரு அதற்கு அப்புறமும் அப்படியேதான் நடக்குது அதையெல்லாம் ரவி பார்த்துக் கொள்வார். நீங்க விற்க வேணாம்னு சொல்லுங்கப்பா. அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அரசியல்வாதி நாங்க இளிச்சவாயனா? ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துட்டு ரோட்டுல சிந்தூரா பாடிக்கிட்டு போக முடியுமா? ராஜா கொள்ளையடிக்காமல் காரில் போகமுடியுமா எல்லோருமே உங்களுக்கு பங்கு போகுதுன்னு சொல்றாங்கப்பா. ஆமா பங்கு வரத்தான் செய்யும் பேசாம உன் வேலைய பாரு இதுதான் என் கடைசி வார்த்தை” இவ்வாறு அந்த ஆடியோவில் பல விசயங்கள் பேசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.