Skip to main content

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் மனமுடைந்த மகள் தற்கொலை!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Depressed daughter passed away due to lack of toilet facilities at home

 

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட ஞானப்பிரகாசம் குளக்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சித்ரா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்துவருகிறார்கள். இவர்களது மகள் அனுசுயா (17). இவர் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். இவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை இதனால் அவரது குடும்பத்தினர் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்துவருகிறார்கள். கடந்த சில நாட்களாக வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருமாறு அனுசுயா தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

 

ஆனால் கோவிந்தராஜ் - சித்ரா தம்பதியினருக்கு தினமும் கிடைக்கும் கூலியே போதுமானதாக இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக அவர்களால் கழிவறை வசதி செய்துகொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அனுசுயா, கடந்த 19ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் அனுசுயா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அனுசுயாவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

 

அங்கு சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (24.09.2021) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அம்மா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெற்ற மகளையே அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை; போலீஸ் பிடியில் இருந்து தப்பி தற்கொலை

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
father attack daughter in kerala; viral incident

பெற்ற ஆறு வயது மகளையே அரிவாள் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் மாவெளிகரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ மகேஷ். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்த ஸ்ரீமகேஷ் கடந்த ஜூன் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் மனைவியையும் 6 வயது மகள் நட்சத்திராவையும் அரிவாளால் வெட்டினார். இதில் மனைவியும் மகளும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தந்தை ஸ்ரீமகேஷ் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து ஸ்ரீ மகேஷிடம் போலீசார் விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீமகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைப்பதற்காக சாஸ்தான்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்த ஸ்ரீமகேஷ் ரயில் முன் பாய்ந்தார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஸ்ரீமகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

vichu vishwanath daughter marriage

 

தமிழ்த் திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். 

 

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990ல் வெளியான ‘சந்தனக்காற்று’  படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர்.சி உடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடன்  38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.  அரண்மனை, கலகலப்பு போன்ற படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இவரது மகள் கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 23 நவம்பர் அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில், இருவீட்டார் ஆசியுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தவுள்ளனர்.