ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கோவில்களில், அதிகாரிகள் கபசுரக் குடிநீர் வழங்குவதோடு உணவு பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய நோயாளிகளோடு உடன் இருப்பவர்களுக்கும் 100 உணவு பொட்டலங்களும், முழு ஊரடங்கு நேரத்தில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருச்சியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments