Skip to main content

"டெங்கு பாதிப்பில் மூன்றாவது இடம்"....மாவட்ட ஆட்சியர் கவலை!!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

டெங்கு பாதிப்பில் வேலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரம் வெளிப்படையாக பேசி டெங்கு குறித்த கவலையை பகிர்ந்துக்கொண்டார்.
 

dengue fever


வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில், கருவேல மரம் அகற்றம், டெங்கு விழிப்புணர்வு, ஹெல்மெட் அவசியம் குறித்து இருசக்கர பேரணி ஏற்பாடு செய்துயிருந்தது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் "கருவேல மரங்களை பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையானவற்றை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. டெங்கு பாதிப்பில் இந்த மாவட்டம் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெங்குவை தடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் சுகாதார பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் ஒத்தொழைப்பு இருந்தால் மட்டும்மே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்" என்றார்.


டெங்கு கொசுவை பரப்புவதற்கு காரணமான தனியார் பள்ளிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் பழனிச்சாமி, நெமிலி ஒன்றியத்தில் ஆய்வு பணிகள் மேற்க்கொண்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களோடு இணைந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வில் தீவிர கவனம் செலுத்தவேண்டும், அதில் கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.