Skip to main content

காய்ச்சலா மருத்துவரை பாருங்கள்... டெங்கு விழிப்புணர்வு பணியில் ரஜினி மக்கள் மன்றம்! 

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் மரணங்கள் நிகழ்கின்றன. நான்கு வயதான பள்ளி மாணவி நட்சத்திரா உட்பட பெரியவர்கள், சிறியவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் 800- க்கும் குறைவானவர்களே டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் என்கிறது. பொதுமக்கள் தரப்பிலோ ஆயிரக்கணக்கானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. மாவட்ட காவல்துறையும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும் பணியை தொடங்கியுள்ளது.
 

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM


இந்நிலையில் டெங்கு பரவாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் பணிகளில் ரஜினி மக்கள் மன்றமும் இறங்கியுள்ளது. வேலூர் மாநகரம் இரண்டாவது மண்டல ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 20ந்தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, மாவட்ட இணை செயலாளர் ஆர்.நீதி (எ) அருணாச்சலம் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ஊர்வலமும் சென்றனர். அப்போது பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், டெங்குவை ஒழிப்போம், விவசாயத்தை காப்போம் என முழக்கமிட்டபடி சென்றனர். 

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, நமது முன்னோர்கள் சொல்வார்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று. என்னதான் நம்மிடம் கோடி கணக்கில் பணம் இருந்தாலும் நோய் என்று ஒன்று வந்துவிட்டால் மன நிம்மதி போய்விடும். நோய் வந்த பின் அதற்காக வருந்துவதை விட நோய் வரும் முன் அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். இது ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 3 லட்சம் தட்டணுக்கள் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை தான் குறையும். தினம் தினம் தட்டணுக்கள் குறைந்து வந்து 20 ஆயிரத்துக்கும் குறைவானதாகும்போது உயிரிழப்பு ஏற்படும். அதனால் இதனை நாம் கவனத்தில் கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க முதலில் நாம் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்காமல், நாமாகவே இந்த காய்ச்சல் தான் முடிவு செய்து மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்வது தவறு.

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM

அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கு சென்று மருத்துவரை பார்த்து சிசிக்சை பெறவேண்டும், தொடர் காய்ச்சல் இருந்தால் அவர் இரத்த பரிசோதனை செய்யச்சொல்வார் அதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை பெற்றால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ளலாம், பிறருக்கு பரவாமல் தடுக்கலாம். டெங்கு எவ்வாறு பரவுகிறது என்றால் டெங்குவால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடித்தால் அவருக்கும் டெங்கு பரவும். எனவே இந்த தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வரும் முன் காப்போம் நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். தலைமை உத்தரவிடும் முன்பே விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.