செயலற்ற இந்த அ.தி.மு.க அரசை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவர் அணி சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, மருந்து மாத்திரைகள் வழங்கிட வேண்டும் என்றும், உயிர் பறிக்கும் காய்ச்சல் வருவதற்கு முன்பு ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய "சுகாதார மற்றும் சுற்றுப்புறத் தூய்மை முன்னெச்சரிக்கை" நடவடிக்கைகள் என்னென்ன என்பதை விளக்கி மக்களுக்கு போதிய விழிப்புணர்வை உருவாக்கிவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ADVERTISEMENT
இதன்படி சென்னையில் திமுக சார்பில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் விழிப்புணர்வு கையேடு விசியோகம் செய்யப்பட்டது. இதில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கலந்து கொண்டு இந்த கையேட்டினை பொதுமக்களிடம் வழங்கினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments