காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் கோரி மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கான 187 ஆய்வக நுட்பனர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநில தலைவர் செல்வகுமார், பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி, தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில பொருளாளர் நா.சங்கர் நன்றியுரை கூறினார்.
காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் கோரி மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment