Skip to main content

ரயில்வேயில் தனியார்மயம்... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 15/07/2020 | Edited on 15/07/2020
CUDDALORE

 

சிதம்பரம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர செயலாளர் கோபால் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜராஜன் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதீஷ், சிதம்பரம் நகர் குழு உறுப்பினர் மேத்யூ, மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் லெனின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பரங்கிப்பேட்டையில், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாலியல் வன்கொடுமை‌; தீட்சிதர் தலைமறைவு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் கிருஷ்ணசாமி தீட்சிதர்  ஈடுபட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.