சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி ஜி.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.