சென்னை மந்தைவெளி, வண்ணியம்பதி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
கரோனா காலம் என்பதால் வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளது எனக் கூறி, அப்பகுதி மக்கள்எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தைநடத்தி சமாதானப்படுத்தினர்.