Skip to main content

30 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்ட கோரிக்கை... கூட்டத்தொடர் அறிவிப்பை எதிர்நோக்கி பொதுமக்கள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

தமிழ்நாட்டில் சிலைகளால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கருதி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் கூண்டு அமைக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதே நடைமுறையில்தான் இன்றும் உள்ளது. மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்குப் புதியதாக சிலை வைக்கும் நடைமுறை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப். 7ஆம் தேதி நடைபெற்ற செய்தித்துறை மானியக் கோரிக்கையில் நாட்டின் சமூகநீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள், விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், ஆகியோரைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரிலும், பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தத்திற்கு மயிலாடுதுறையிலும், முத்துலட்மி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலும், ராணிபேட்டையில் தமிழறிஞர் வரதராசனார் உள்ளிட்ட 11 பேருக்கு சிலைகள் நிறுவப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீரநாரயணன் (வீராணம்) ஏரி. சாதாரணமாக செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு வீராணம் ஏரி கி.மு 907 - 955 ஆண்டு முதலாம்  சோழா்கள் காலத்தில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஏரியின் கட்டுமானப் பணியில் பழங்குடியினரே முழுவதும் ஈடுபட்டு கட்டியுள்ளனர். இந்த ஏரியைக் கட்டிய பெருமை அவர்களையே சாறும் என்றும் கூறப்படுகிறது. ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது. பின்னர் அவர் தனது தந்தை பராந்தக சோழன் பெயரைப் சூட்டிக்கொண்டார். இந்த ஏரி தஞ்சை மாவட்டம்  கீழணையில் இருந்து வடவார் வாய்காலின் வழியாக தண்ணீரை பெற்று, வீராணம் ஏரியில் சேமிக்கப்பட்டு, பாசனத்திற்கும் சென்னையின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் முழுகொள்ளவு 47.50 அடியாகும்.

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பகுதியான 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பராந்தக சோழன் கட்டியுள்ளார். இப்படி பெருமை மிக்க ஏரியைக் கட்டிய அவருக்கு வீராணம் ஏரியில் சிலை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். கடந்த மாதம் வீராணம் ஏரியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரை கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் பெண் விவசாயியும், வீராணம் ஏரியின் ராதா வாய்கால் பாசன சங்கத் தலைவருமான ராதாவாய்கால் ரங்கநாயகி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.  இதேபோல் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் வீராணம் ஏரியைக் கட்டிய பராந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினருக்கு மனு அளித்துவருகிறார்கள்.

 

மேலும், தற்போதைய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளார். எனவே தமிழ்நாடு அரசு வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்றி, வீராணம் ஏரியைக் கட்டிய பரந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலையை வைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தொடரிலே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.