இன்று (23-12-2021) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சாதி ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பலரும் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்தில் அதிகரிக்கும் சாதி ஆணவக் கொலைகள் மற்றும் சாதி வெறுப்பு குற்றங்களை தடுக்க உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.