Skip to main content

டெல்டா மையப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.... அதிகாரிகளே காரணம்; குமுறும் விவசாயிகள்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களைத்தாண்டி விட்டது ஆனாலும் பாசனத்திற்கான தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் மையப்பகுதிக்கு வந்து சேரவில்லை என விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

 மேட்டூர் அணை ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. கடந்த காலங்களில் கல்லணை திறக்கப்பட்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றுவிடும். ஆனால் கல்லணை திறக்கப்பட்டு மூன்று வாரங்களை கடந்துவிட்டன ஆனாலும் மையப் பகுதிகளுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை. "மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும் ஆனால் மேட்டூர் அணையிலிருந்து 15 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமே திறக்கப்படுவதே முதல் காரணம்," என்கிறார்கள் விவசாயிகள்.

 

 The delta is not getting water to the epicenter .... the authorities are the cause; farmers!


கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, ஆகிய பிரதான ஆறுகளில் மொத்தமே 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் திறந்தால் இன்றைக்கு ஆறுகள் வாய்க்கால்கள், நீர்தேக்கிகள் இருக்கும் நிலமையில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கும்,  அதோடு ஆறுகளில் தூர்வாரும் பணிகளும், குடிமராமத்து பணிகளும் நடைபெறுகிறது. இதனால்தான் பிரதான இந்த மூன்று ஆறுகளிலும் தண்ணீர் குறைவாக விடப்படுகிறது." என்கிறார்கள் சில பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

குறைந்த அளவு தண்ணீர் காவிரியில் இருந்து வடவாற்றிலும், வெண்ணாறு, வெட்டாறு குடமுருட்டியிலும் பிரித்து விடப்படுகிறது.  இதன் காரணமாக கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல இடைப்பட்ட பகுதிகளுக்கும் தண்ணீர் முழுமையாக சென்றடையாத நிலையே தொடர்கிறது.

 

 The delta is not getting water to the epicenter .... the authorities are the cause; farmers!

 

கல்லணையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவையாறு அருகே உள்ள கபிஸ்தலத்தில் இருந்து பிரிந்துவரும் மண்ணியாற்றில் ஒரு சொட்டுத்தண்ணீர்கூட இன்னும் திறக்கவில்லை. அங்குள்ள காவிரியிலேயே ஓரமாகத் தான் தண்ணீர் செல்கிறது. காவிரியின் மையப்பகுதியான திருப்பணந்தாள், மணல்மேடு, சோழபுரம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி நீர் இன்னும் எட்டவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " ஆறுகள், குளங்களை தூர்வாருகிறோம் என்கிற பெயரில் மணலை கொள்ளை அடித்துவருகின்றனர். அதோடு விளைநிலங்களில் எடுக்கப்படும் மணல் ஆறுகளை அடைத்து கடத்திவருவதால் ஆற்றில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளே கையூட்டு வாங்கிக்கொண்டு அஞ்சுகின்றனர்." என்கிறார்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.