Skip to main content

 பணமா, காசோலையா?- காக்கிகளைக்கொண்டு நில உரிமையாளர்களை அச்சுறுத்தும்  கெயில் நிறுவனம்

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

கெயில் நிறுவனம் குழாய் பதிக்கப்பட உள்ள விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினரின் மிரட்டலோடு பணம் மற்றும் காசோலை வழங்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகிவருகிறது.

 

e

 டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாநில அரசு வாய்மூடி மெளனியாக இருந்து மறைமுகமாக ஆதரவளித்துவருகிறது. அபாயகரமான இந்த திட்டத்தை எதிர்த்தும்,  திட்டத்தை கைவிடக் கோரியும் விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஒருங்கினைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

 பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் ஜூன் 12 ம் தேதி மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை கடல் கரையோரம் 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது தவிர பல்வேறு விவசாய மற்றும் பொதுநல அமைப்புகளும் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

 

இந்தநிலையில் மாதானம் முதல் மே மாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளை கெயில் என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. பல இடங்களில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை மே மாத்தூரில் இருந்து நரிமனத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்துவருகிறது.

 

t

 

இதனை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து போலீசார் கெடுபிடியுடன் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு ஆயத்தமடைகின்றனர். ஒருசில விவசாயிகள் இதற்கு உடன்பட மறுத்து நீதிமன்றம் செல்ல உள்ளனர். கெயில் நிறுவனமோ இதோடு நிற்காமல் அடுத்தகட்ட சாகுபடிக்கான தொகையையும், காசோலையாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கொடுத்து மடைமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர், இதற்கு இனங்காத விவசாயிகளின் மீது பொய்வழக்கு போட்டு அச்சுறுத்துவது என காவல்துறையின் மூலம் வேலைகள் நடந்துவருகிறது.


 
மீண்டும் பதற்றம் அதிகமாகியுள்ளது, ஒருபுறம் எட்டுவழிச்சாலை பிரச்சினை, மற்றொருபுறம் நான்குவழி சாலைக்கான பிரச்சினை, நடுவில் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, இப்படி நாளாபுறம் தமிழக மக்களை மத்திய அரசு நசுக்கிவரும் நிலையில் தமிழக அரசோ கோமா நிலையில் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கெயில் குழாய் பதிப்பு; ஓபிஎஸ் -ஸை கண்டித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

'' Does the OPS know anything? '' - Minister Thangam thennarasu Condemning

 

கடந்த 17 ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தற்போது விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

 

இந்நிலையில் ஓபிஎஸ்-ஸின் அறிக்கைக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். அதில், ''அதிமுக ஆட்சியில்தான் கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரியில் எரிவாயு குழாய் பதித்தது. உண்மை இதுவாக இருக்க எதுவும் அறியாதது போல் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். தற்பொழுது புதிதாகச் செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கெல்லாம் சாத்தியக்கூறு உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

'குழாய் மூலம் இயற்கை எரிவாயு'- நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

Kochi-Mangaluru natural gas pipeline pm naredra modi

 

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

 

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கர்நாடகா மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர். 

 

12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களைக் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.