Skip to main content

குருவை சாகுபடியை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் டெல்டா விவசாயிகள்.

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பம்பு செட் மூலம் ஆங்காங்கே நடவு செய்யப்பட்டிருந்த குருவை சாகுபடி அறுவடைக்கு வந்தும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 

heavyrain delta farmers


 

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. குறுவை சாகுபடியும் பொய்த்துவிட்டது. பம்புசெட் வைத்திருக்கும் பெரும் விவசாயிகள் மட்டுமே நிலத்தடி நீரைக்கொண்டு குறைந்த அளவில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கும் இடையே குறுவை சாகுபடியை செய்து அறுவடைக்கு காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் பெய்து வரும் கன மழையால் அறுவடை பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என கலக்கம் அடைந்துள்ளனர் விவசாயிகள்.
 

Delta farmers who are unable to harvest the Guru's cultivation heavy rain

 

நெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களும் மழையில் நனைந்து பயிர்கள் சேதம் அடைவதால், அதை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகிவிட்டது என்கிறார்கள் விவசாயிகள். 

 

heavyrain

 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி, அதோடு மின்வெட்டு, இரண்டையும் சமாளித்து, இரவு,பகல் தூக்கத்தை இழந்து விளைவித்தோம், அறுவடை நேரத்தில் இப்படி மழை பேய்து பயிர்கள் நாசமாக்கிடுச்சி, ஒருபுறம் மழை தேவையும் இருக்கு, மற்றொரு புறம் அழிக்கிறது. கடந்த மாதம் ஒரு கட் வைக்கோல் 110 ரூபாய் இன்று முப்பது ரூபாயாக சரிந்து விட்டது. இருபது மேனி வரும் விளைச்சல் தற்போது 10 மேனியாவது கிடைத்தாலே போதும்ங்கிற நிலமையாகிடுச்சி, விளைச்சல் பூறாவும் சாய்ந்து தண்ணீர் கோத்து முளைக்கத்துவங்கிடுச்சி, வாய்க்கால், ஆறுகள் தூர்வாராமல் போனதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் பாழாகிறது" என்கிறார்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.