Skip to main content

டெல்டா விவசாயிகளை விவசாயத்தை துறந்து போராட்டக் களத்திற்கு இழுக்கும் ஒஎன்ஜிசி

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

தமிழக ஆற்றுப்படுகை மற்றும் கடலோர பகுதிகளில் கனிம வளங்களான இயற்கை எரிவாயு, நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் அதிகம் கிடைப்பதாக கண்டறிந்த ஒஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களிலும் சோதனைகளை செய்து மத்திய அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையின் அிப்படையில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்குவும் ஹைட்ரோ கார்பன் எடுக்கவும் கடந்த ஆண்டுகளில் ஒப்பந்தம் விடப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் புரிந்துணர்வு கையெழுத்திட்டனர். 

 

protest

 

இந்த நிலையில் ஜெ முதல்வராக இருந்த போது இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கிராமம் கிராமமாக சென்று மீத்தேன் எதி்ப்பு பிரசாரங்களை செய்தார். அதன் பிறகே விவசாயிகள் விழிப்புணர்வு பெற்ற நிலையில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல போராட்டங்களை நடத்தினார். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் களத்திலேயே நம்மாழ்வார் உயிர் பிரிந்தது. அதன் பிறகு மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று ஜெ அறிவித்தார். 

 

சில ஆண்டுகள் அமைதியாக இருந்த நிலையில் ஜெ மறைவுக்கு பிறகு திட்த்தின் பெயரை மாற்றி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்று அறிவித்து ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் நெடுவாசல் கிராமத்தில் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக ஜெம் நிறுவனம் கையெழுத்திட்டது. மீத்தேன் திட்ட பிரச்சாரங்களுக்கு பிறகு  விழிப்புணர்வடைந்திருந்த நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை 196 நாட்கள் நடத்தினார்கள். இந்த விவசாயிகள் கிராம மக்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள், தன்னார்வளர்கள், திரைத்துறையினர் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று போரா்டத்தில் பங்கெடுத்தனர். இதனால் ஜெம் நிறுவனம் ஒப்பந்த இடத்தை மாற்றிக் கொடு என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று அறிவித்தது. ஆனால் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. சில மாதங்கள் அமைதியாக இருந்த மத்திய அரசு மீண்டும் தமிழகத்தை குறிவைத்து கிளம்பியுள்ளனர்.

 

protest

 

தற்போது ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் 2 வட்டங்களையும் ஒஎன்ஜிசி ஒரு வட்டத்தையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தகவல் அறிந்து விவசாயிகள் கொதிப்படைந்துள்ள நிலையில் தஞ்சை நகரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நகர் முழுவதும் விளம்பர  பதாகைகளை வைத்துள்ளது.. ஒஎன்ஜிசி நிறுவனம் விவசாயிகளுக்கான உரம் தயாரிக்க உதவுகிறது, மரபுசாரா எரிசக்தி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது என்ற பல திட்டங்களை வெளிக் காட்டும் நூறுக்கும் மேற்பட்ட பதாகைகளை வைத்துள்ளது. இந்த பதாகைகளை பார்த்து நகர மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் கொதிப்படைந்துள்ளனர்.

 

இது குறித்து டெல்டா விவசாயகள் கூறும் போது.. டெல்டா பகுதியில் விவசாத்தை அழித்து விவசாயிகளை அவதிப்பட வைத்து விளை நிலத்தில்  இயற்கை எரிவாயு எடுக்கும் சூழ்ச்சியால் தான் காவிரியில் தண்ணீர் உடைபபெடுத்து போகும் போது கூட கடைமடைகளுக்கு தண்ணீரை விடாமல் கடலுக்கு அனுப்பியுள்ளனர்.  அதனால் சில நாள் வந்த தண்ணீரை நம்பி நாற்றுவிட்ட விவசாயகளும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தி் உள்ள நெல் பயிர்களும் கருகி நாசமாகிவிட்டது. அதாவது மத்திய அரசு டெல்டாவில் செய்ற்கையாக ஒரு வறட்சியை ஏற்படுத்தி விளை நிலங்களை பிடுங்க நினைக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது. அதனால் தான் ஒஎன்ஜிசி பதாகைகள் வைக்க அனுமதியும் கொடுத்துள்ளது.

 

 

கொஞ்ச தண்ணீர வைத்து விவசாயம் செய்ய நனைத்த விவசாயிகளை திசை திருப்பிவிட்டு திட்டத்தை செயல்படுத்த துணிந்துவிட்டது. விவசாயிகள் சாகுபடிக்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் போது 3 வட்டங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டதுடன் தஞ்சை நகர் முழுவது வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மூலம் விவசாய பணிகளை துறந்து விவசாயகள் போராட்டக் களத்திற்கு அழைக்கிறது ஒஎன்ஜிசி நிறுவனம். ஆனால் உயிரே போனாலும் மண்ணைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறா்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.