Skip to main content

கரோனாவால் சுய ஊரடங்கு; வெறிச்சோடி முடங்கிய டெல்டா

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்டா மாவட்டத்தின் பொதுமக்களும் சுயமாக ஊரடங்கில் ஈடுபட்டதால், கடைவீதிகள், தெருக்கள், வயல்வெளிகள், என மொத்த நிலப்பரப்பும் வெறிச்சோடி கானப்பட்டது.
 

உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாட்டு மக்கள் சுய ஊரடங்கை ஏற்படுத்திக்கொண்டு மார்ச் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி மக்களிடையே வேண்டுகோள் வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா முழவதும் மக்கள் வீட்டில் முடங்கினர். 

 

Shops closed



அந்த வகையில் எப்பொழுதும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் நாகை துறைமுகமும் வெறிச்சோடியது. மீன் விற்பனை இல்லாததால் துறைமுகமே வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்களின் ஆயிரக்கணக்கான பைபர் மற்றும் விசைப்படகுகளைக் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் என எதுவும் இயங்காமல் புகையில்லாத காற்று வீசியது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி புழுதி பறந்து காணப்பட்டது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயமும், நாகூர் தர்காவும்கூட மக்கள் நடமாட்டம் இல்லாமல் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. 
 

வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால், 500 க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன் வந்து ஒருநாள் முழுவதும்  கடைகளை அடைத்தனர்.
 

திருவாரூரில் பேருந்துநிலையம், ரயில் நிலையங்களில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும், ஆனால் ஊரடங்கிக்கிடந்தது.

 

கிராமப்புற பொதுமக்கள் விடியற்காலை நான்கு மணிக்கே வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, வீட்டில் சாவகாசமாக டீவி முன்பு அமர்ந்து சீரியலில் ஆழ்ந்தனர்.
 

மார்ச் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நல்ல முகூர்த்த தினம் என்பதால், இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த திருமணங்கள் அனைத்துமே, ஆடம்பரமில்லாமலும் மக்கள்கூட்டம் இல்லாமல் நடந்து, திருமண வீட்டாரைச்  சோகத்தில் உறைய செய்துள்ளது.
 

அதே போல் டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி பணிகள் நடந்துவத்தது, பயறு எடுத்தல், நடவு நடுதல், பருத்தி போடுதல் என பல வேலைகள் நேற்று வரை ஜரூராக நடத்தது. இன்று வயல்கள் முழுவதும் ஆள் அரவமே இல்லாமல் இருக்கிறது.
 

மொத்தத்தில் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் சிறப்பான பந்த் செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

‘தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம்’ - தொடர் போராட்டம் அறிவித்துள்ள மீனவ மக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The fishermen have declared a continuous protest and they are going to ignore the election

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி அடுத்துள்ள கீழ மூவர்க்கரை மீனவகிராம மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து தேர்தலைப் புறக்கணித்து கடலில் இறங்கி போராட்டம் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட  கீழமூவர்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என குறைகளைகூறி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் உள்ள அந்த மக்கள் கூறுகையில், “கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த அரசும் செவிகொடுத்து கேட்கவில்லை. மேலும், ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருகின்றனர். வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை. அதனால், பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்பதாக ஒருமனதாக முடிவெடுத்து போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி ஆதரவு கேட்டுள்ளோம்” என்கின்றனர்.

இந்நிலையில்,  இன்று (03-04-24) மீனவர் கிராம தலைவர் தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதில் முதல் கட்டமாக  நாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும்  கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட ஆயுத்தம் ஆகி வருவதால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.