தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (16/11/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவர் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் குழுவின் உறுப்பினர்கள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சந்தித்து, அறிக்கையை அளித்தனர்.
இந்த நிகழ்வின் போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.