Skip to main content

 டூவிலர்களில் இரவு நேரங்களில் மணல் கடத்திய இளைஞர்கள் சிறையிலடைப்பு!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 

மணல் தொழில் மட்டும் தான் கோடி கோடியாக பணம் கொட்டும் தொழிலாக இருந்தது. இதை மனதில் வைத்து பெரிய பெரிய ரவுடிகள் அரசியல்வாதிகளின் துணையோடு இன்னும் தமிழகத்தின் டெல்டா பகுதியில் மணல் கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மணல் எடுத்து ஆறுகளில் பெரிய பெரிய பள்ளமாக மாறி இருக்கிறது.  இதனால் தண்ணீர் பிரச்சனை வரும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மணல் எடுக்கும் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

 

y

 

இந்த நிலையில் கிராமங்களில் வீடுகட்டுவது என்பது வழக்கமான ஒன்று தான். தன் வீட்டு கட்டுமானத்திற்கு தேவையான மணலை தாங்களே வண்டிகளில் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது கடுமையான கட்டுபாடுகள் இருப்பதால் வேலையில்லாத இளைஞர்கள்  தங்களுடைய டூவிலர்களில் இரவு நேரங்களில் மணல் எடுத்து அதை வீடு கட்டும் இடங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வந்தனர்.

 

இந்த நிலையில் தான் குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் ஏரியாவில் உள்ள ஒருவர் வீடு கட்டுவதற்கு மணல் வேண்டும் டாட்டா ஏசியில் கொண்டுவந்து கொடுங்கள் அதிகம் பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதும் இளைஞர்கள் உற்சாகம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக மணல் திருடி எப்போ சம்பாதிப்பது இதனால் டாட்டா ஏசியில் மணல் அள்ளி சென்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று நிறைய டூவிலர்களில் மணல்மூட்டை கட்டி திருட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை தடுக்க வந்த அதிகாரிகளையும் பணம் ஆசையில் அடித்து தாக்கி தற்போது சிறையில் இருக்கிறார்கள்.

 

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் வடக்கு 2 பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இந்த பகுதியில் அனுமதியில்லாமல் டூவிலரில் திருட்டுத்தனமாக மணலை கடத்தி விற்கிறார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஏஓ விஜயேந்திரனிடம் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
 

உடனே விஏஓ விஜயேந்திரன் தலைமையில் கிராம உதவியாளர் புஷ்பலதா மற்றும் அதிகாரிகள் மருதூர் வடக்கு பகுதியில் இரவு 11 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர். இப்போது காவிரி ஆற்றில் இருந்து டூவிலரில் மணல் கடத்தி வந்த 7 பேரை தடுத்து நிறுத்தினார். ஆனால் 7 பேரும் கிராம உதவியாளர் புஷ்பலதாவை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

 

தகவல் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் தாக்குதலில் காயம் அடைந்த புஷ்பலதாவை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வருவாய்துறையினர்,  மருதூர் வடக்கு 2 பகுதியில்  மணல் கடத்தல் நடக்கிறது. இதை தடுக்க சென்ற அதிகாரி மீது தாக்குல் நடத்தியுள்ளனர் என்று குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் புகார் கொடுத்தனர்.   உடனே களத்தில் இறங்கிய போலீஸ்,  தப்பியோடிய மணல் திருடர்களை பிடித்து வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பியுள்ளார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.