Skip to main content

ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த பிரசவம்- குழந்தையின் குரலை கூட கேட்காமல் மரணித்த தாய்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி இருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்-ஜமுனா தம்பதி. இந்த தம்பதியினருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஜமுனா கொஞ்சம் தாமதமாக கர்ப்பமடைந்துள்ளார். இது தலைபிரசவம் என்பதால் அந்த கிராமத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பதிவு செய்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ந் தேதி மாலை ஜமுனாவுக்கு பிரசவவலி வந்துள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை அழைத்து வந்து மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களும் அவரை அனுமதித்துள்ளனர். மாலை அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகமாகியுள்ளது. அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லையாம். இதனால் அங்கிருந்த வார்டு பாய் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

 

 Delivery seen by ambulance driver

 

சில மருந்துகளும் அவருக்கு செலுத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் ஜமுனா ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்துள்ளார். அதோடு ரத்தப்போக்கு அதிகமாக இருந்துள்ளது. பிரசவ அறையை விட்டு வெளியே வரும் முன்பே ஜமுனா இறந்துள்ளார். இந்த தகவல் மருத்துவமனையில் காத்திருந்த உறவினர்களுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளனர்.

உடனடியாக ஜமுனாவின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாமல், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை உதவியாளர், ஒரு நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான் ஜமுனா இறந்தார் என அவரது உறவினர்கள், குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் மருத்துவ அதிகாரிகள். காவல்நிலையத்திலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டிவருகிறது என்கின்றனர் ஜமுனாவின் குடும்பத்தாரும், உறவினர்களும்.

அரசு மருத்துவரின் பொறப்பற்றத்தனம், ஊழியர்களின் அலட்சியம் போன்றவை ஒரு பச்சிளம் குழந்தையின் தாயின் உயிரை பறித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.