Advertisment

போதைப் பொருள் கடத்தல்; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

delhi police incident Contact for Tamil film producer

Advertisment

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

police Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe