Skip to main content

வடமாநில பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை...!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், உதவியாக இருந்த ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம்.


 

Delhi girl issue - Court judgement

 


 

டெல்லியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள சிட்டியூனியன் வங்கியில் வேலை கிடைத்தது. அதற்காக டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தவர் ,அங்கிருந்து கடந்த 2018 டிச.1ஆம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்து இறங்கினார். கும்பகோணத்திற்கு முதன்முறையாகவும், இரவு நேரத்தில் வந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சக நண்பர்கள் கூறிய திசைகள் தெரியாமல் அங்கும் இங்குமாக நடந்தார். லேசான மழையும் தூரியதால் திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் நின்றவர், நள்ளிரவு 11 மணியானதால் தங்குவதற்கு திட்டமிட்ட அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாததால் ரயில்நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்த, அந்த ஆட்டோ ஓட்டநரும் நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டார். அந்த பெண் ஆங்கிலத்தில் தான் செல்ல வேண்டிய தெருவுக்கான முகவரியை சொல்லியுள்ளார். ஆட்டோ ஓட்டுநருக்கு மொழிபுரியாமல் அந்த பெண்ணை பைபாஸ் பகுதியில் இருக்கும் விடுதிகள் பக்கம் அழைத்துச் சென்றுள்ளார்.

செல்போன் மூலம் ஆட்டோ டிரைவர் திசைமாறி செல்வதை தெரிந்துகொண்டவர், எங்கே திசை மாறி செல்கிறீர்களா என மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டபடியே, தன்னுடைய சக நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுனரோ அந்த பெண்ணை நள்ளிரவு என்றுகூட பார்க்காமல் அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அந்த பெண் தன்னுடைய டிராலி பேக்கை ரோட்டில் இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையிலே நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞனோ அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, சக நண்பர்களுக்கு தகவல்கொடுக்க அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்துள்ளனர். நாச்சியார்கோயில் பைபாஸ் ரோட்டுக்கு சென்ற இளைஞர்கள் அந்த பெண்ணை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

 



நான்கு இளைஞர்கள் அந்த பெண்ணின் வாயில் துணியைவைத்து அடைத்துவிட்டு சத்தமே இல்லாமல் கொடூரமாக அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதன்பிறகு அந்த பெண்ணை நான்கு இளைஞர்களில் ஒருவன் அழைத்துக்கொண்டு நாச்சியார்கோயில் மெயின்ரோட்டுக்கு வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணையும் ஏற்றிவிட்டு, அதில் இளைஞன் ஒருவனும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் வரும்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் தான் செல்போனை மறந்து வைத்துவிட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை வாங்கி அந்த செல்போனில் இருந்து சக நண்பர்களிடம் பேசி, அந்த பெண்ணை கும்பகோணத்தில் விட்டுவிட்டு வருகிறேன், நீங்கள் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு பஸ்டாண்டுக்கு வந்துவிடுங்கள் என கூறியுள்ளான்.

கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே வந்தபோது ஆட்டோவிலிருந்து அந்த இளைஞர் இறங்கிகொண்டான். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை 60 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இறங்கும் போது அந்தபெண் ஆட்டோவின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார். பின்னர் விடுதியின் அறைக்கு சென்றதும் அந்த பெண்ணிற்கு உடல் நிலை முடியாமல் போனது. மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த கொடுமையான சம்பவங்களை கூறினார். அதன்பிறகே தகவல் வெளியே பரவியது. இதுகுறித்து  வங்கி நிர்வாகத்துக்கும் சம்பவம் தெரியவந்தது. அதன் பிறகு டெல்லியில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்துவிட்டனர்.

 



சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் போலீஸாரிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுகொண்டதன் பேரில், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை மட்டுமே கூறினார். அதன்பிறகு தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரை தூக்கிவந்து விசாரித்தனர் காவல்துறையினர், அந்த டிரைவரோ தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞன் பேசியதை கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து போலீஸார் துப்பு துலங்கியதில், டெல்லி பெண்ணை பாலியல் கொடுமைசெய்தது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (26), மோதிலால் தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த்குமார் (23), மூப்பனார் நகர்   சிவாஜி மகன் புருஷோத்தமன் (21), ஹலிமா நகர் சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (21) ஆகிய நான்குபேர் என்பதை கண்டறிந்து அவர்களை தூக்கிவந்து விசாரித்தனர்.

அதோடு நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் குருமூர்த்தி (26) என்பதை கண்டுபிடித்து ஐந்து பேரையும் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் கைது செய்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை விசாரித்து, அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபணம் செய்யப்பட்டதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

 



குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், அதோடு நால்வருக்கும் தலா 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கொடூர குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கும்பகோணம், தஞ்சை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.