டெல்லியில் விவசாயிகள் பேரணி - மோடிக்கு கனிமொழி கண்டனம்

Farmers rally delhi

Kanimozhi

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நேற்றும், இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துகின்றனர்.

இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Condemned Delhi Farmers kanimozhi narandra modi protest rally Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe