Skip to main content

டெல்லியிலிருந்து வந்த தேர்தல் நிதி! பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்ட வேட்பாளர்கள்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019


                 
                           தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். மக்களுக்கும் தொண்டர்களுக்கும் ஏக குஷியை தருகிறது தேர்தல். ஆனால், தற்போதைய தேர்தல், காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. 

 

          ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அதிகபட்சம் 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையம் நிர்ணயத்திருக்கும்  நிலையில், இதெல்லாம் டீ  செலவுக்கு மட்டும்தான் சரியாகும் என ஆவேசப்படுகிறார்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள். அதனால், தேர்தல் ஆணையம் நிர்ணயத்த தொகையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் செலவு செய்ய களமிறங்கியுள்ளனர். அதற்கேற்ப  பண மூட்டைகள் உடையும் சத்தம் எல்லா தொகுதிகளிலும் எதிரொலிப்பதால் பிரதான கட்சிகளின் தொண்டர்களிடம் குதூகலம் கொப்பளிக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டும் அந்த உற்சாகம் இல்லை.

 

d

             

ஏன், இப்படி? என கதர்ச்சட்டையினரிடம் நாம் காதுகொடுத்தபோது, ‘’ தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ் கட்சி. திருச்சியில் திருநாவுக்கரசு, தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவகங்கையில் ப.சி.யின் மகன் கார்த்திசிதம்பரம், குமரியில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் என வசதிபடைத்தவர்கள் களமிறங்கினாலும், தேர்தல் நிதி கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 


                இதனையடுத்து, 9 வேட்பாளர்களில் 5 பேருக்கு 2 சியும், 2 பேருக்கு 10 சியும் கொடுத்து உதவியிருக்கிறார் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி. சிவகங்கைக்கும் குமரிக்கும் மட்டும் தேர்தல் நிதி இல்லை. இதில் வசதிபடைத்த வேட்பாளர்கள் பல கோடிகளை தொகுதிக்குள் கொட்டி வருகின்றனர். மற்றவர்களோ டெல்லியிலிருந்து தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதையே மறைத்துவிட்டார்களாம். அதிலும் 10 சி வாங்கிய இருவரும் சுமார் 8 சியை பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

 

                இந்த நிலையில், திமுகவின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என நம்பும் காங்கிரஸ் வேட்பாளர்கள், உடன்பிறப்புகளை செமையாக கவனித்துள்ளனர். அதே கவனிப்பு கதர்சட்டை தொண்டர்களுக்கு இல்லை. முதல் கட்டமாக பூத் கமிட்டிக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு, இனியும் தருவதற்கு பணம் இல்லை என முறுக்குகிறார்கள். இதனால் நொந்து போயிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களோ அதிருப்தியடைந்து வருகின்றனர். திருச்சி, தேனி, சிவகங்கை, குமரி தவிர மற்ற 5 தொகுதிகளில் கதர்சட்டையினரின் புலம்பல்கள் காதை துளைத்தபடி இருக்கிறது. இப்படியிருந்தால் காங்கிரஸ் வாக்குகளை அதிமுக கூட்டணி எளிதாக பர்ச்சேஸ் செய்துவிடும் ‘’ என கொந்தளிக்கின்றனர் கதர்சட்டையினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.