Skip to main content

திருச்சி அரசு மருத்துவமனையில் காலாவதியான மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு !

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


டெல்லியில் கடந்த மார்ச் 11- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை இஸ்லாமியர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 3000- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அவர்கள் சமீபத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லி சென்று திரும்பிய பலருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத்துறையினர், டெல்லி சென்று திரும்பி பட்டியலில் வராதவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.
 

delhi conference meeting trichy hospital medicine


இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 63 பேர் கலந்து கொண்டுள்ளனர்.அவர்களில் 55 பேரை நோய்த் தடுப்பு குழுவினர் கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களைத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு மருத்துவமனையில் இருக்கும் சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் காலாவதியான மருத்துவப் பொருட்களை வைத்து டெஸ்ட் எடுக்கிறார்கள்.இதன் மூலம் நோயின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியாது என்கிற குற்றச்சாட்டு  வெளியாகியுள்ளது.
 

delhi conference meeting trichy hospital medicine


இது குறித்து நாம் திருச்சி மருத்துவமனையில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசிய போது அவர்கள் நம்மிடம், "சளி, உமிழ்நீர், ரத்த மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கிறார்கள்.ஆனால் அந்த மருத்துவப் பொருட்கள் எல்லாம் 2012, 2010, என ஆண்டுகள் முடிந்த மருத்துவப் பொருட்களாக உள்ளது.
 

இதை எப்படி நாங்கள் உண்மை என்று நம்ப முடியும்,அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை எங்களுக்குப் போய் விட்டது. இல்லை என்றால் காசு கொடுத்து வெளியில் இருந்து பொருட்களை வாங்கி எங்களுக்கு நம்பிக்கையான மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறோம்" என்றார். 
 

 

delhi conference meeting trichy hospital medicine


நாம் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசனிடம் பேசினோம்.அவர் "WHO அறிவுறுத்தலின் படி தான் ஆய்வு செய்கிறோம்,மருத்துவப் பொருட்கள் கிடையாது.காலாவதியாக இன்னும் 6 மாதம் இருக்கிறது.எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் திருவாரூரில் ஆய்வக வசதி இல்லை என்பதால் விழுப்புரத்திற்கு அனுப்பியிருக்கிறோம்" என்றார். 

இதற்கிடையில் திருச்சி லால்குடியில் உள்ள தாளக்குடி பகுதியில் 4 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்ததால், அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.மேலும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் சுகாதாரத் துறையினர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.