ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சமூகநீதி பாதுகாப்புப் பேரவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லி நாடாளுமன்றம் முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று (3.4.2018) முற்பகல் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
ADVERTISEMENT
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.ராஜா எம்.பி., டி.கே.ரெங்கராஜன் எம்.பி., மேனாள் எம்.பி. விசுவநாதன் (காங்கிரசு), பேராசிரியர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தெகலான் பாகவி, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments