Advertisment

குரூப் 2 தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் அவதி!

Delay in commencement of Group 2, Group 2A Mains

தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள்நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெறுகிறது.

Advertisment

இந்தத் தேர்வுக்காக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை தமிழ் தேர்வும் மதியும் பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 55,071 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Advertisment

இந்நிலையில், சென்னை, கடலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 நிமிடங்கள் ஆகியும் இன்னும் தமிழ்மொழி தேர்வுதொடங்கப்படவில்லை எனத்தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் சில இடங்களிலும்தேர்வு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியிருப்பதால் சில இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு வெளியே காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe