Skip to main content

மத்திய அரசை கண்டித்து பாதுகாப்பு படைக்கல தொழிற்சாலை தொழிலாளர்கள் 1 மாத வேலைநிறுத்தம் அறிவிப்பு!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

மத்திய அரசை கண்டித்து ஒரு மாத வேலை நிறுத்தம் பேராட்டம் நோட்டீசை துப்பாக்கி தொழிற்சாலை HAPP தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய அரசின் பாதுகாப்புத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சென்னை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 6 இடங்களில் உள்பட இந்தியாவின் 41 படைக்கல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாட்டின் ராணுவத்திற்கும் சிறப்பு பிரிவின் பாதுகாப்பு பிரிவு போலீசுக்கு நவீன ரக துப்பாக்கிகள் தளவாடப் பொருட்கள் ஆண்டுக்கு ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.

 Defense plant workers announce 1-month strike to denounce federal government


இவற்றை மத்திய அரசு நேரடியாக நிர்வகிப்பது தவிர்த்து தனியார்மயமாக்குவதற்கான வேலையில் இறங்கி உள்ளது. இதனால் மறைமுக ஊழியர்கள் 1 லட்சம் பேர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மத்திய அரசின் தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து முயற்சியை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை ஒரு மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளனர்.

 

 Defense plant workers announce 1-month strike to denounce federal government


இதன் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நாவல்பட்டில் HAPP தொழிற்சாலைகளில் எம்பிளாய்மெண்ட் யூனியன், அம்பேத்கார் யூனியன், பாரதிய மஸ்தூர் சங்கம் ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டக்குழு சார்பில் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்யை அந்தந்த நிர்வாகங்களிடம் கொடுத்து அதிர்ச்சியை கொடுத்தனர். 

எம்பிளாய்மெண்ட் யூனியன் இரணியன் சத்திய வாசகன் தலைமையிலும், பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ரகுமான் அலெக்சாண்டர் தலைமையிலும், ஐஎன்டியுசி சார்பில் பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் தனித்தனியே பொது மேலாளர் ராகவேந்திரா சோப்ராவிடம் வேலை நிறுத்த போராட்டத்திற்கான நோட்டிஸ்யை வழங்கினர்.

துப்பாக்கி தொழிற்சாலை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் பொதுமேலாளர் சிரீஸ்கேராவிடம் போராட்டத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலையில் போராட்டக்குழு சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஒரு மாதம் போராட்டம் காரணமாக தொழிற்சங்கங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. 

 

 Defense plant workers announce 1-month strike to denounce federal government

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மீண்டும் வேலைகேட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட 65 பேர் மீது போராட்டத்தை தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ள சம்பவம் நடந்தது. 

திருச்சி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக 150 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் ஏற்கனவே வேலைப் பார்த்த தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் புதிதாக ஆட்களை தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணி கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துப்பாக்கி தொழிற்சாலையில் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணிக்கு சென்ற பொழுது பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பெண்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் நவல்பட்டு போலீசார் இப்பிரச்சனை சம்பந்தமாக வேலை இழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 34 பேர் மீதும் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவன தொழிலாளர்கள் 20 பேர் மீதும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மீதும் போராட தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் நவல்பட்டு போலீசாரின் இந்த செயல் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது தொழிற்சாலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்களே 1 மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு இறங்கிய இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.